தயாரிப்பாளர் மகன் எடுத்த அட்வான்டேஜ்.. ப்ளார் விட்டு பணத்தை தூக்கி வீசிய நடிகை.. பதறிய நடிகர்
சென்னை: தென்னிந்திய சினிமா என்றாலே அங்கு அரங்கேறும் கிசுகிசுக்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக, வாரிசு என்ற லேபிளோடு வலம் வரும் சில நபர்களின் அத்துமீறல்களும், அதற்கு டாப் நடிகைகள் கொடுக்கும் பதிலடிகளும் அவ்வப்போது கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ஒரு முன்னணி தயாரிப்பாளரின் மகனுக்கும், தற்போதைய டாப் நடிகை ஒருவருக்கும் இடையே நடந்த மோதல் தான் இப்போது சினிமா வட்டாரத்தின் ஹாட் டாபிக்.
பெரிய இடத்து வாரிசு என்பதால், ஆரம்பத்தில் இருந்தே அந்த தயாரிப்பாளர் மகன் பல இடங்களிலும் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு அத்துமீறி நடந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தாராம். பண பலமும், பின்னணியும் இருப்பதால் இவரை யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை என்ற பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் ஏற்கனவே உலா வந்த வண்ணம் இருந்தது. இந்த சூழலில் தான், சமீபத்தில் நடந்த ஒரு பிரம்மாண்ட படத்தின் சக்சஸ் பார்ட்டியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த பார்ட்டியில் கோலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, அங்கே வந்த அந்த தயாரிப்பாளர் மகன், போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருந்த டாப் நடிகையிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்ள முயன்றதாகத் தெரிகிறது. நடிகை ஆரம்பத்தில் பொறுமையாக எச்சரித்தும், அந்த வாரிசு நபர் தனது எல்லையை மீறி, "நான் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்ற தோரணையில் அட்வான்டேஜ் எடுக்கப் பார்த்துள்ளார்.

பளார்: தயாரிப்பாளர் மகனின் இந்த அத்துமீறலால் மொத்தமாக பொறுமையிழந்த அந்த நடிகை, பார்ட்டி என்றும் பாராமல், சுற்றியிருப்பவர்கள் என்றும் பாராமல், சட்டென அந்த நபரின் கன்னத்தில் 'ப்ளார்' என அறைந்துள்ளார். அத்தோடு நிற்காமல், அந்த நபர் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை அப்படியே அவர் முகத்திலேயே தூக்கி வீசிவிட்டு, "உன் பணமும் வேண்டாம், உன்னுடைய படமும் வேண்டாம்" என்று ஆவேசமாக கத்தியுள்ளார்.
ஷாக்: நடிகையின் இந்த திடீர் கோபத்தையும், தயாரிப்பாளர் மகனுக்கு விழுந்த அறையையும் பார்த்ததும் அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனது. குறிப்பாக, அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்த அந்த படத்தின் முன்னணி நடிகர், இந்த சம்பவத்தை பார்த்து மொத்தமாக பதறிப்போய்விட்டார். விஷயம் பெரிய பஞ்சாயத்தாக மாறிவிடக் கூடாது என்று சுதாரித்துக் கொண்ட அந்த நடிகர், உடனே இருவருக்கும் இடையே புகுந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
சலசலப்பு: தற்போது இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சினிமா பிரமுகர்கள் மத்தியில் ரகசியமாக விவாதிக்கப்பட்டு வேகமாக பரவி வருகிறது. இதைக் கேள்விப்பட்ட இணையவாசிகளும், சினிமா ரசிகர்களும், "பின்னணி இருக்கிறது என்பதற்காக பெண்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா? அந்த நடிகை தைரியமாக கொடுத்த பதிலடி தான் சரி" என்று நடிகைக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications