அட்வான்டேஜ் எடுத்துக் கொண்ட இயக்குநர்.. கேரவனுக்கு கூப்பிட்டு கவனித்து அனுப்பிய நடிகை
சென்னை: திரையுலகில் படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் அத்துமீறல்களும், அதற்குப் பின்னால் இருக்கும் அதிகார துஷ்பிரயோகங்களும் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவது வழக்கம் தான். ஆனால், தன்னிடம் அட்வான்டேஜ் எடுக்க முயன்ற ஒரு இயக்குநருக்கு, தென்னிந்திய திரையுலகில் டாப் கியரில் இருக்கும் ஒரு முன்னணி நடிகை, தனது கேரவனுக்குள்ளேயே வைத்து தரமான பாடம் புகட்டியுள்ளார் என்ற அதிரடி கிசுகிசு தான் தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ஒரு பான்-இந்தியா படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் நடிக்கும் அந்த முன்னணி நடிகை, தனது அர்ப்பணிப்பான நடிப்பால் ஒட்டுமொத்த படக்குழுவின் பாராட்டுகளையும் பெற்றவர். ஆனால், படத்தின் இயக்குநரோ, அந்த நடிகையின் எளிமையையும், பணிவான குணத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்ததாகக் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஆடை வடிவமைப்பு, பாடல் காட்சிகள் மற்றும் சில நெருக்கமான காட்சிகளைப் படமாக்கும் சாக்கில், அந்த இயக்குநர் நடிகையிடம் எல்லை மீறி அட்வான்டேஜ் எடுக்க முயன்றுள்ளார். பலமுறை நடிகை அதனை நாசூக்காகத் தவிர்த்தும், அந்த இயக்குநர் தனது அத்துமீறல்களை நிறுத்தவில்லையாம். ஒருகட்டத்தில் இயக்குநரின் இந்த டார்ச்சர் பொறுமைக்கு மேல் போக, நடிகை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

கேரவனுக்குள் நடந்தது என்ன?: அடுத்த முறை இயக்குநர் சீன் விளக்குவதற்காகத் நெருங்கி வந்தபோது, நடிகை மிகவும் அமைதியாக, "டைரக்டர் சார், எனக்கு இந்த சீன்ல கொஞ்சம் டவுட் இருக்கு, கேரவனுக்கு வாங்க பேசலாம்" என்று கூப்பிட்டுள்ளார். இயக்குநர் ஏதோ குஷியில் உள்ளே நுழைய, அங்கே நடிகை தனது பவுன்சர்கள் மற்றும் மேனேஜரை முன்னிறுத்தி, இயக்குநருக்குத் தரமான 'கவனிப்பு' கொடுத்து எச்சரித்துள்ளார். "இனிமேல் இப்படி நடந்தால் விஷயம் வெளியே போகும், அப்புறம் சினிமா வாழ்க்கையே காலி" என்று நடிகை கறாராக வெளுத்து வாங்கியதில் இயக்குநர் அப்படியே ஆடிப்போய்விட்டாராம். கேரவனில் இருந்து வெளியே வந்த இயக்குநரின் முகம் அப்படியே வெளுத்துப் போய் இருந்ததைக் கண்டு ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் ஸ்தம்பித்துப் போனதாக சினிமா வட்டாரங்கள் கசியவிடுகின்றனர்.
பாராட்டு: அதன்பின்னர், அந்த இயக்குநர் நடிகையிடம் தேவையில்லாமல் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, படப்பிடிப்பை மட்டும் கச்சிதமாக முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம். தன்னிடம் அட்வான்டேஜ் எடுக்க நினைத்த இயக்குநருக்கு, எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கேரவனுக்குள் வைத்தே சைலண்டாக கவனித்து அனுப்பிய அந்த நடிகையின் தில்லான தைரியத்தைப் பார்த்துவிட்டு, இப்போது கோலிவுட் திரையுலகமே வியந்து பாராட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications