திரையில் தொடரும் தீண்டாமை... எதால் அடிக்கலாம் இந்த திருந்தாத ஜென்மத்தை?
குருட்டு அதிர்ஷ்டமோ.. திறமையோ... இத்தனை சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வருவோம் என்று அந்த இசையமைப்பாளர் கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்.
இன்றைய இசையமைப்பாளர்கள் யாராலும் கற்பனை செய்து பார்த்திராத உயரம் இது.
ஆனால் தான் அடைந்திருக்கும் உயரத்துக்கும் அவரது சின்ன புத்திக்கும் சம்பந்தமே இல்லை.

உயர்ந்த சாதி என்ற நினைப்பு மனம் முழுக்க அழுக்காக வியாபித்திருப்பதன் விளைவு, தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களையே சாதி பார்த்து சிறுமைப்படுத்துகிறதாம் இந்த ஜென்மம்.
அந்தப் பாடகரின் கானா பாடல்களால்தான் இவர் இசையே உச்சத்துக்குப் போனது. ஆனால் அந்தப் பாடகர் ஒவ்வொரு முறை தனது வீட்டில் உள்ள ஸ்டுடியோவுக்கு வந்து போன பிறகு, அவர் உட்கார்ந்த இடத்தைக் கழுவி தீட்டுக் கழிக்கிறாராம் இந்த அற்ப பிறவி. உடன் பணியாற்றும் பாடலாசிரியருக்கும் இதே தீட்டுக் கழிப்பு ட்ரீட்மென்ட்தானாம்.
இந்த இசைப் பார்ட்டி இன்று சினிமாவில் காலெடுத்து வைக்கவும், உச்சம் தொடவும் காரணமாக இருந்த இயக்குநரும் அதே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவருக்கும் இதே ட்ரீட்மென்ட்தானா?
தெரிஞ்சா சொல்லுங்கப்பா!


Click it and Unblock the Notifications











