மாஸ் நடிகரின் மனைவிக்கு கருக்கலைப்பு.. நடிகைதான் காரணமாம்.. கமுக்கமா முடிச்சிருக்காங்களே ப்பா

By Staff

சென்னை: தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் என்று பெயர் எடுத்தவர் அந்த ஆறெழுத்து நடிகர். அவருக்கு ஒன்றென்றால் ரசிகர்கள் உயிரை விடவும் தயாராக இருக்கிறார்கள். தான் வளர்ந்துவந்த சமயத்திலேயே காதல் திருமணம் செய்துகொண்ட அவர்; தற்போது தனது திருமண வாழ்க்கையில் சர்ச்சையை சந்தித்துவருகிறார். இந்நிலையில் அவரது மனைவி கருக்கலைப்பு செய்த விஷயம் பெரிய ஷாக்கை கொடுத்திருக்கிறது.

கோலிவுட் எத்தனையோ கமர்ஷியல் ஹீரோக்களை பார்த்திருக்கிறது. ஆனால் இவர் கொஞ்சம் ஸ்பெஷல்தான். சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அத்தனை பேரையும் தனது ரசிகர்களாக மாற்றி வைத்திருக்கிறார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனைவரது வீட்டிலும் ஒருவராகவும் இருக்கிறார். அந்த தைரியத்தில்தான் தனது புதிய பயணத்தையும் அவர் ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்: சினிமாவில் நடிகர் வளர்ந்துவந்த சமயத்திலேயே அவருக்கு காதல் மலர்ந்துவிட்டது. நடிகரின் காதல் வீட்டுக்கும் பிடித்துப்போனதால் திருமணமும் செய்துவைத்தார்கள். திருமணத்துக்கு பிறகு எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தனது குடும்ப வாழ்க்கை உண்டு என்றுதான் இருந்தார். ஆனால் அதெல்லாம் நம்பர் நடிகை இன்டஸ்ரிக்குள் வரும்வரைதான். அவர் வந்து இவருக்கு ஜோடியாக நடித்த பிறகு அத்தனையும் தலைகீழாக மாறியது.

Top Tamil Mass Hero Faces Marital Turmoil as Wife Reportedly Underwent Abortion Amid Affair Rumours

கண்டித்த மனைவி: முதல் சில படங்களின்போது அவர்களுக்குள் இருந்த பழக்கம் நட்பு என்ற அளவில்தான் இருந்தது. நாளாக நாளாக அந்த நட்பு படுக்கையை பகிரும் அளவுக்கு சென்றது. இரண்டு பேரும் சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் வாரத்தில் குறைந்தது 5 முறையாவது சந்தித்து தங்களுக்குள் அத்தனையையும் பரிமாறிக்கொண்டிருந்தார்கள். இது கூலாக இருக்கும் நடிகரின் மனைவிக்கு தெரியவந்து நடிகரை கண்டிக்க செய்தார். இதனால் நடிகையிடமிருந்து விலகினார்.

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்: ஆனால் சமீப காலமாக நடிகைக்கும், நடிகருக்குமான பழக்கம் மீண்டும் படுக்கைவரை சென்றுவிட்டது. சொல்லப்போனால் தனது மனைவி, குழந்தைகள், தாய், தந்தை என யாருமே வேண்டாம். நடிகை மட்டும் போதும் என்ற மனநிலையில்தான் நடிகர் இருக்கிறார். இதனால் வீட்டிலும் தினமும் பஞ்சாயத்து; புதிய பயணத்திலும் அவப்பெயர்தான் கிடைத்திருக்கிறது. ஆனாலும் நடிகர் விடுவதாக இல்லை.

கருக்கலைப்பு செய்த மனைவி: நடிகரின் தொடர்ந்து நடிகையின் மடியிலேயே கிடப்பதை அறிந்து மனைவியும் விலகிவிட்டாராம். இந்நிலையில் புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அதாவது நடிகையுடன் நடிகர் டச்சில் இல்லாத சமயத்தில் நடிகரின் மனைவி கர்ப்பம் ஆனாராம். ஏற்கனவே குழந்தைகள் இருக்கும் சூழலில் புதிதாக வரும் குழந்தையை நினைத்து ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தாராம்.

ஆனால் திடீரென மீண்டும் நடிகையுடன் நடிகர் பேட்ச் அப் செய்துவிட்டார். இதனை எதிர்பார்க்காத மனைவி; நீங்கள் அந்த நடிகையோடு பழகிக்கொண்டிருந்தீர்கள் என்றால் கருவை கலைத்துவிடுவேன் என்று சொல்லி பார்த்தாராம். நடிகரும் கடமைக்கு தலையை ஆட்டிவிட்டு தனது தலையை நடிகையின் மடியில் வைப்பதை தொடர்ந்துகொண்டே இருந்தாராம். இதனால் உச்சக்கட்ட டென்ஷனான மனைவி இப்படிப்பட்ட கணவனுக்கு என் மூலம் இன்னொரு குழந்தை வராது என்று கருக்கலைப்பு செய்துவிட்டாராம்.

வேண்டாம் என்று நடிகர் எவ்வளவோ சொன்னபோதும், 'உங்களுக்கு இன்னொரு குழந்தை வேண்டுமென்றால் நடிகையிடம் பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே; குழந்தை பெற்றுக்கொடுக்க மட்டும் நான் வேண்டுமா?' என்று தடாலடியாக கூறி பிரியும் முடிவுக்கு அப்போதே வந்துவிட்டாரம். பிறகு ஒருவழியாக அவரிடம் சத்தியமும் சமாதானமும் செய்து பிரச்னையை ஆஃப் செய்திருக்கிறார்.கணவரின் அத்தனை கபட நாடகத்தையும் நம்பித்தான் மனைவி அமைதியாகி வாழ சம்மதித்திருக்கிறார். ஆனால் மீண்டும் நடிகையுடன் பழக ஆரம்பித்ததால்தான் சமீப காலமாக தனது தாய் வீட்டிலேயே வசித்துவருகிறாராம் மனைவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X