இந்த நடிகை-தயாரிப்பாளர் கள்ளத்தொடர்பை வைத்து ஒரு சீரியலே எடுக்கலாம் போல!
சென்னை: இரவில் மலரும் பூவின் பெயர் கொண்ட தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை தயாரிப்பாளருடன் தொடர்பு வைத்து குழந்தையே பெற்றுவிட்டாராம்.
கேரளாவைச் சேர்ந்த அந்த நடிகை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவர் மலையாளத்தில் நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இரவில் பூக்கும் மலரின் பெயர் கொண்ட அந்த தொடரின் நாயகியான அவருக்கும், தொடரின் தயாரிப்பாளருக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளதாம். தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் மூலம் நடிகைக்கு குழந்தை உள்ளதாம். அம்மணி தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளாராம். தயாரிப்பாளர் இரவு நேரத்தில் நடிகையின் வீட்டிற்கு வந்து செல்கிறாராம்.
கேரளாவில் இந்த நடிகையின் கள்ளத் தொடர்பு பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. இவங்க கதையை வைத்தே ஒரு தொலைக்காட்சி தொடர் எடுக்கலாம் போலையே என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











