வள வள பேச்சு.. சல சல பேச்சு... ஸாரி ஸாரி பாஸு....!
நட்சத்திர டிவி சேனலின் விருது விழாவை தொகுத்து வழங்கிய அந்த தொகுப்பாளினியின் வளவளா பேச்சுக்கு கமெண்டுகளும் கண்டனங்களும் அள்ளித் தெளிக்கவே டிவி சேனல் நிர்வாகம் கொஞ்சமே கொஞ்சம் தட்டி வைத்தது. காபி குடிக்கவும் கன்டிசன் போட்டுவிட்டதால் நிகழ்ச்சியை எதுவும் தற்போது நடத்துவதில்லையாம்.
ஏன் இப்படி ஒரேடியாக பேசி பேசி போரடிக்க வேண்டும் என்று எல்லோரும் கேட்டு வைக்கவே ஒருவழியாக முகநூல் மூலம் மன்னிப்பு கேட்டாராம் அந்த தொகுப்பாளினி.
ரசிகர்களிடம் மட்டுமல்ல டிவி சேனல் நிர்வாகத்திற்கும் இதன்மூலம் தனது மன்னிப்பை தெரிவித்துவிட்டாராம் அந்த தொகுப்பாளினி. இவரது மன்னிப்பு டிவி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதா என்பதை தொகுப்பாளினிதான் தெரிவிக்கவேண்டும்.
எதுக்குப் பேசனும். எதுக்கு ஸாரி கேக்கனும்.. வாயை அடக்கியிருக்கலாம்ல...!
Comments


Click it and Unblock the Notifications