Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கடைசி "காபி"யைக் கொடுத்து ஸ்டாருக்கு "ஷாக்" கொடுத்த சேனல்!
பிரபலங்களோடு காபி குடித்து கலந்துரையாடும் அந்த தொகுப்பாளினி நட்சத்திர சேனலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளினியின் செயல்பாடு சரியில்லை என்று பகிரங்கமாகவே பேசப்பட்டது. இதற்கு கூப்பிட்டு கண்டித்த சேனல் தரப்பு அவர் தொகுத்து வந்த நிகழ்ச்சியை இரண்டு சீசன்களோடு முடித்துவிட்டனராம். கடைசியாக ஒளிமயமான நடிகையோடு அவர் குடித்ததுதான் கடைசி காபியாம். அப்புறம் யாருடனும் தொகுப்பாளினி காபி குடிக்கவில்லையாம்
இந்த மடம் விட்டால் சந்தைமடம் என்று தொகுப்பாளினியும் வேறு சேனல் தேடி வருகிறாராம். சிறந்த தொகுப்பாளினி விருது வாங்கிய அவருக்கா இந்த கதி என்று புலம்பும் நட்பு வட்டாரங்கள், சேனல் தரப்பையும், தொகுப்பாளினியையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனராம்.
இன்றே இப்படம் கடைசி
சினிமா பிரபலங்களை அழைத்து விருது வழங்கும் அந்த நட்சத்திர டிவியில் சலசலப்பு அதிகரித்து வருகிறது. காரணம் சினிமா நட்சத்திரங்களை சரியாக கவனிக்கவில்லை என்பதுதானாம். கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு சரியாக சினிமா பிரபலங்கள் யாரும் வரவில்லை.
வந்தவர்களும் பாதியிலேயே கழன்று கொண்டனர். எனவே இந்த ஆண்டோடு விருது விழாவிற்கு மூடு விழா நடத்திவிடலாமா என்று யோகிக்கிறதாம் நட்சத்திர சேனல்.