ஹோட்டலில் மது பார்ட்டி.. நடிகைகள் செய்த விவகாரமான காரியம்.. ச்சீ இப்படியெல்லாம் செஞ்சிருக்காங்க
சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் இந்த இரண்டு நடிகைகளும் இரண்டு பேர். இவர்களுக்கு திருமணமும் ஆகிவிட்டது. திருமணத்துக்கு பிறகு பிஸியான நடிகைகளாகத்தான் இருக்கிறார்கள். அதேசமயம் அடிக்கடி மது பார்ட்டிகளிலும் கலந்துகொள்கிறார்களாம் அவர்கள். சூழல் இப்படி இருக்க அவர்கள் கலந்துகொண்ட ஒரு பார்ட்டியில் போதை தலைக்கேறி எக்குத்தப்பான செயல்களில் ஈடுபட்டுவிட்டார்களாம். அது மற்றவர்களை முகம் சுளிக்க வைத்ததாம்.
இரண்டு நடிகைகளுமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள்தான். அவர்கள் கிட்டத்தட்ட அனைத்து டாப் நடிகைகளுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்கள். அவர்களில் முதலானவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் மாடலிங்கில் இருந்த அவர்; பக்கத்து மாநில இயக்குநரால் சினிமாவில் அறிமுகமானவர். அப்படி அவர் அறிமுகமான முதல் சில படங்களே அவருக்கு சூப்பரான வரவேற்பை பெற்றுக்கொடுத்துவிட்டன. வரிசையாக ஹிட்டுகள் கிடைத்ததால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

சில சிக்கல்கள்: தமிழில் பிஸியாக நடித்த அவருக்கு மற்ற மொழி வாய்ப்புகளும் கிடைத்தன. அப்படி அவர் வேறு சில மொழிகளிலும் நடித்தார். அங்கேயும் அவருக்கு வரவேற்பு நன்றாகவே இருந்தது. தேவையான நேரத்தில் கிளாமர் ரோல்கள், மற்றபடி ஹோம்லி ரோல்களில் கலக்கினார். அந்த மொழியில் நடித்தபோது அவருக்கு காதலும் மலர்ந்தது. வீட்டு சம்மதம் கிடைத்ததன் காரணமாக உடனடியாக தான் காதலித்தவரையே அம்மணி திருமணமும் செய்துகொண்டு செட்டிலானார். இப்போதும் நடித்துவருகிறார்.
நடிகை சொன்னதை நம்பவில்லை: அதேபோல் இன்னொரு நடிகையும் கிட்டத்தட்ட தமிழ்நாடுதான். அவரது குடும்பம் சினிமா குடும்பம்தான். இந்த நடிகையும் சினிமாவுக்குள் வந்த குறுகிய காலத்திலேயே உயரத்துக்கு சென்றுவிட்டார். இவரும் பெரும்பாலான டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். அவர்களில் ஒரு உச்ச நடிகரோடு சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதில் துளிக்கூட உண்மையில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி தள்ளினார். இருப்பினும் உண்மை அது இல்லை என அனைவருக்குமே தெரியும் என்பதால்; அம்மணி சொன்னதை நம்பவில்லை. இவரும் திருமணம் செய்துகொண்டார்.
நெருங்கிய தோழிகள்: இந்த இரண்டு நடிகைகளும் திரைத்துறையில் நெருங்கிய தோழிகளாக வலம் வருகிறார்கள். இவர்கள் சேர்ந்து வெளிநாடு செல்வது, உள்ளூரிலேயே போதை பார்ட்டி நடத்துவது என எக்கச்சக்கமான விஷயங்களை செய்வார்களாம். அப்படி சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு பார்ட்டியில் அம்மணிகள் இரண்டு பேரும் கலந்துகொண்டார்கள். அதில் திரைத்துறையிலிருந்து சில இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்கூட பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகைகளின் செயல்: அந்தப் பார்ட்டியில் நடிகைகள் நடந்துகொண்ட விதத்தை பார்த்து எல்லோருமே ச்சீ ச்சீ என்று சொல்லிவிட்டார்களாம். அதாவது அவர்கள் இரண்டு பேரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் போல் நடந்துகொண்டார்களாம். பொது இடத்தி இருந்தபடியே ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொள்வது, வேறு சில வேலைகளை செய்வது என இருந்தார்களாம். அப்போதுதான், ஓஹோ இரண்டு பேரின் நெருக்கத்துக்கும் இதுதான் காரணமா என பார்ட்டியில் வந்தவர்கள் முணுமுணுத்து சென்றார்கள். முழுக்க முழுக்க இரவில் போதையில் மிதந்துவிட்டு; காலையில் தட்டு தடுமாறி வீடு சென்று சேர்ந்தார்களாம்.


Click it and Unblock the Notifications














