கண்மணி நடிகையின் கேரியருக்கு ஆப்பு வைக்கும் போட்டி ஹீரோயின்கள்!
அழகான கண்களுடன் மூக்கும் முழியுமாக அறிமுகமாகியும் இன்னமும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுகிறார் கண்மணி நடிகை. வரும் படங்கள் எல்லாம் இரண்டாவது ஹீரோயினாகவே வருகின்றன.
'ஆரம்பத்திலேயே இதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று பில்டப் கொடுத்திருக்க வேண்டும். சில படங்களில் நடித்ததால் தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகளே வருகின்றன. போதாதுக்கு நான் ஸோலோ ஹீரோயினாக நடித்தால் அந்த படம் ஓடாது என்று சக நடிகைகளே கிளப்பி விடுகிறார்கள்' என்று புலம்புகிறாராம்.
"பெரிய டைரக்டர், கன்னடத்துல சூப்பர் ஸ்டார்னு சேர்ந்தா... அந்த மெகா படமே சரியா போகலை... காரணம் அவ ராசி...'' என்று கிளப்பி விடுகின்றராம் மற்ற ஹீரோயின்கள்.
Comments


Click it and Unblock the Notifications