3 கோடி கேட்டு அலற விடும் குணச்சித்திர நடிகர்!
நல்லி எலும்பை கடிப்பதில் பெயர் பெற்ற நடிகர் இப்போது ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்துக்கு சம்பளம் குறைத்துக்கொண்டார். ஆனால் குணச்சித்திர வேடங்களுக்காக வரும் ஆட்களைத்தான் அலற விடுகிறாராம்.

தமிழ் சினிமாவில் இப்போது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. ஹீரோவாக நடித்தபோதே தயாரிப்பாளர்களை அலற விட்ட நல்லி எலும்பு நடிகர் இப்போதும் அதே ரேஞ்சில் மூன்று விரல்களை காட்டுகிறாராம். இவருக்கு வர வேண்டிய வாய்ப்புகள் இப்போது முன்னாள் காமெடியனுக்கு போய்க் கொண்டிருக்கின்றன.
இதேபோல் இயக்கத்தில் இருந்து நடிப்புக்கு வந்திருக்கும் இமயமும் இரண்டு விரல்களைக் காட்டுகிறாராம். பாடகர் மகனுடன் இணைந்து நடித்திருக்கும் படத்தில் ஹீரோவை விட இவருக்கு சம்பளம் அதிகமாம்.
Comments


Click it and Unblock the Notifications