அலை நடிகையின் எதிர்பார்ப்பு பலிக்குமா?
சகோதரி புண்ணியத்தால் சினிமாவிற்கு வந்த அந்த நடிகை ஒரு காலத்தில் ஓகோ என்று நடித்தார். ரசிகர்கள் கூட்டம் அவரை மொய்த்தது. உச்ச நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் நடித்தார்.
அதே சூட்டோடு சூட்டாக திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தைகள் என்று செட்டில் ஆனார். பத்து, பதினைந்து ஆண்டுகள் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று தெரியாமலேயே இருந்த அந்த நடிகையின் மகள் ஒருநாள் நடிக்க வந்தார். முதல் படம் வெற்றி பெற்றது. அடுத்தடுத்த படங்களில் ஜொலிக்கவில்லை நடிகை.
அவருக்கு துணையாக வந்த நடிகை டிவி நிகழ்க்சிகளில் தலைகாட்டினார். அவரின் அடுத்த மகளும் மணியான படத்தில் நடிக்க வந்தார். ஆனால் முதல் படவே ஊத்தி மூடியது. மனதைரியத்துடன் அடுத்த படத்தில் நடிக்க வைத்தார் நடிகை. அது சுத்தமாக சங்கு ஊதியது.
ஆனாலும் டிவி நிகழ்ச்சிகளில் ஆடி உற்சாகமூட்டினார் நடிகை. இரண்டு மகள்களையும் சினிமாவில் கரை சேர்க்காமல் ஓயப்போவதில்லை என்று காத்திருக்கிறார். அலையின் ஆசை நிறைவேறுமா காலம்தான் பதில் சொல்லும்.


Click it and Unblock the Notifications











