ஆண்டவரே நீங்களுமா?: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை
சென்னை: கடைசியில் ஆண்டவரையும் மொக்கை போட வைத்துவிட்டார் பெரிய முதலாளி.
பெரிய முதலாளி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் துவங்கியதில் இருந்தே பார்வையாளர்கள் கடுப்பில் உள்ளனர். முதல் பாகத்தை போன்று சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பெரிய முதலாளி செய்யும் அனைத்து முயற்சியும் சொதப்பி விடுகிறது.

போட்டியாளர்கள்
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களை மற்றவர்களுக்கு வாய்ஸ் கொடுக்குமாறு ஆண்டவர் கூறியது சுவாரஸ்யமாக இருந்தது. அடடே இன்றைய நிகழ்ச்சி நன்றாக இருக்கிறதே என்று நினைத்து முடிக்கும் முன்பு எரிச்சல் அடைய வைத்துவிட்டார்கள்.

மொக்கை
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து யாரை வெளியேற்றப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்க ஆண்டவரோ இரண்டு பேரை அழ வைத்துவிட்டு நம்மையும் எரிச்சலாக்கும்படி மொக்கை போட்டுக் கொண்டிருந்தார்.

முடியல சார்
ஆண்டவரே, கடைசியில் உங்களையும் மொக்கை போட வச்சுட்டாங்களா?. படக்குன்னு அந்த கவரில் இருக்கும் பெயரை சொல்லுங்க. இப்படி கடுப்பேற்றாதீர்கள் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

கடுப்பு
நாற்காலி பற்றி நச்சுன்னு பன்ச் வசனம் பேசி கைதட்டல்களை பெற்ற ஆண்டவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை அறிவிக்க தாமதம் செய்து பார்வையாளர்களை கடுப்பாக்கிவிட்டார். அவர் என்ன ஆசைப்பட்டா மொக்கை போட்டிருப்பார், சொல்லியிருப்பாங்க செய்திருப்பார் என்கிறார்கள் அவர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications










