அவன் மட்டும் என் கையில கெடச்சான்: கொலவெறியில் இயக்குனர்
சென்னை: இயக்குனர் ஒருவர் தன்னை பற்றி பரவி வரும் வதந்தியால் கோபத்தில் உள்ளாராம்.
தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று பலரும் புத்திமதி கூறியும் கேட்காமல் நடிகை ஒருவரை மணந்தார் பெயரில் வெற்றியை வைத்திருக்கும் இயக்குனர். திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. விவாகரத்து வாங்கிவிட்டு நடிகை நடையை கட்டிவிட்டார்.

இந்நிலையில் இயக்குனருக்கு இரண்டாவது திருமணம் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இரண்டாவது திருமணம் எல்லாம் இல்லை, வெறும் வதந்தி தான் என்று இயக்குனரும் விளக்கம் அளித்து வருகிறார்.
மீண்டும் கேரள நடிகையை மணக்கப் போகிறார் என்று முதலில் பேசப்பட்டது. அதன் பிறகு பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்கிறார் என்று கூறப்பட்டது.
தன்னை பற்றி இப்படி அடிக்கடி வதந்தியை கிளப்பிவிடுவது யார் என்று தெரியாமல் கோபத்தில் உள்ளாராம் இயக்குனர்.


Click it and Unblock the Notifications











