மருத்துவமனையில் நடிகை.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. சிக்கிய காப்பர்-டி.. ஊரே பேசிய கிசுகிசு
சென்னை: 90களில் ஆரம்பித்து 2010 வரை வார இதழ்களில் வெளியான கிசுகிசுக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அதிலும் சில கிசுகிசுக்கள் எப்போதுமே எவர்கிரீன். அப்படித்தான், ஒரு நடிகையை பற்றி வந்த கிசு கிசு காலங்களை கடந்தும் நிலைத்து நிற்கிறது. தொடர்ந்து பேசப்படுகிறது.
ஒவ்வொரு விஷயத்திற்காக ஒவ்வொரு நடிகை ஃபேமசாக இருந்த காலகட்டம் அது. நடனம் மட்டுமல்ல, இடுப்பு அசைவுக்கென்றே பேசப்பட்டவர் நடிகை சிம்ரன். கண் அழகுக்காகவே, அந்த உருளை விழிகளுக்காக ரசிகர் வட்டாரத்தை சேர்த்தவர் மீனா.

கால் அழகு தனிப்பட்டு காணப்பட்டதால் அதையே கேமராக்கள் ஃபோகஸ் செய்ய புகழ் பெற்றவர் ரம்பா. இப்படியாக ஒவ்வொரு நடிகைகளும் குறிப்பிட்ட விஷயங்களுக்காக புகழப்பட்டனர்.
இப்படித்தான் ஒரு நடிகை ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக புகழப்பட்டார். ஆனால் கவர்ச்சிக்காக அல்ல. ஹோம்லியான கெட்அப்பில்தான் தோன்றினார். ஆனால் நல்ல வடிவான முகம், நல்ல உயரம், பெரிதாக பூசாத உடம்பு என அண்டை வீட்டு பெண் மாதிரியான தோற்றம் கொண்டவர் என்பதால் தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
பெரும்பாலும், சேலை, சுடிதார் என்று அணிந்தே நடித்ததால் அவர் ரொம்ப நல்ல பொண்ணுப்பா என்ற எண்ணம் மட்டுமே ரசிகர்களிடமிருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் வெளியான ஒரு செய்தி ரசிகர்களை மட்டுமல்ல திரையுலகத்தையே உலுக்கிப்போட்டது. அந்த செய்தி இதுதான்.. குறிப்பிட்ட நடிகை ஒரு விபத்தில் சிக்கியதால் அவசரமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகவும், அங்கு ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகளை உடலில் செய்து பார்த்ததாகவும், ஆனால் அந்த நடிகை காப்பர்-டி கருத்தடை சாதனத்தை அணிந்திருந்ததாகவும் வெளியானது அந்த செய்தி.
காப்பர்-டி என்பது, கரு உருவாகாமல் இருக்க பெண்ணுறுப்பில் பொருத்தப்படும் ஒரு கருவி. ஆணுறை மாதிரி இது பெண்களுக்கானது. திருமணமானவர்கள் குழந்தை பிறப்பை தள்ளிப்போட இதை பயன்படுத்துவது உண்டு. ஆனால் திருமணமாகாத இந்த நடிகை எதற்காக இதை அணிந்திருந்தார் என்பது அப்போது பெரும் பேசு பொருளானது.

அதேநேரம், டாக்டர்கள் தரப்பிலிருந்து செய்தித்தாளுக்கு தகவல் கிடைத்ததாக அந்த செய்தி அப்போது வெளியாகியிருந்தது. இது சாதாரண கிசுகிசுவாக கடந்து போகவில்லை. தொடர்ந்து பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வந்தது. செவி வழிச் செய்தியாகவும் தீயாக பரவியது. இப்போதும் கூட 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் முக்கால்வாசி பேருக்கு இந்த கிசுகிசு தெரியாமல் இருக்காது.
ஆனால் கிசுகிசு என்பது கிசுகிசுவாக போய்விட்டதே தவிர அந்த நடிகையின் சினிமா கேரியரில் அது பெரிய பிரச்சினைகளை தரவில்லை. அதிலும் குறிப்பாக இப்போதுள்ள காலகட்டத்தில், அப்படி இருந்தால்தான் என்ன.. அது அவர் விருப்பம் என்ற கருத்துருவாக்கம்தான் இளைஞர்களுக்கு இருப்பதால், இந்த எவர்கிரீன் கிசுகிசு காலப்போக்கில் மறைந்துபோகும் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications











