கோட் நடிகர் காத்திருப்பது இதற்குத்தானா?
கோட் நடிகருக்கு தீபாவளியன்று வெளியான படத்துக்கு பின் பெரிய கேப்.
அந்த இயக்குநர் சொன்ன கதையை போன படத்து ஷூட்டிங்கிலேயே கேட்டு ஓகே சொல்லிவிட்டார். நடிகர் சொன்ன சில சில கரெக்ஷன்களையும் ஜனவரியிலேயே செய்துவிட்டு முழு ஸ்க்ரிப்டையும் ரெடி செய்துவிட்டார் இயக்குனர்.

ஆனாலும் நடிகர் காத்திருக்க சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பூஜை போடப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்துதான் நடிகர் ஷூட்டிங்கில் கலந்துகொள்வாராம்.
இந்த எட்டு மாத காத்திருப்புக்கு ஆபரேஷன் மட்டுமே காரணம் இல்லை. ஜாதகம் தான். நிறைய கடவுள் நம்பிக்கை கொண்ட நடிகருக்கு ஜாதகத்தின் மீதும் அபார நம்பிக்கையாம். குரு பெயர்ச்சி வரை காத்திருக்கும்படி ஆஸ்தான ஜோசியர் சொன்னதால்தான் இந்த காத்திருப்பாம்!
Comments


Click it and Unblock the Notifications