தளபதிக்கு ஜோ நோ சொன்னது ஏன் தெரியுமா?
திருமணத்துக்கு பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் குடும்பத்தின் சம்மதத்துடன் ரீ எண்ட்ரி ஆன ஜோ நடிகை கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடிக்கிறார். வெளிப் படங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்திருந்தவர், தளபதி படத்தில் மட்டும் நடிக்கலாம் என திட்டமிட்டு இருந்தார்.
இளம் இயக்குநர் சொன்ன ஒன்லைன் பிடித்துப்போய்தான் ஓகே சொல்லியிருந்தார். படத்தின் பீரியட் போர்ஷனில் மட்டுமே நடிகை வருவது போலவும், நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் கேரக்டர் இருந்தது.

முதலில் சம்மதித்த கணவர் குடும்பம், இப்போது இவருடன் நடித்தால் பின்னர் எல்லா ஹீரோக்களும் அணுகுவார்கள். முடியாது என்று சொன்னால் பிரச்னை. எனவே ஹீரோ இல்லாத படங்களில் மட்டும் நடித்து விட்டுப் போய் விடலாம் என்று அட்வைஸ் செய்ததாம்.
மாமனாரின் பேச்சைத் தட்ட முடியாத நடிகை நோ சொல்லிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











