ஒரு நைட்டுக்கு 35 லட்சமா?.. இளம் நடிகை பற்றி தீயாக பரவும் தகவல்.. என்ன மேட்டர் தெரியுமா?
சென்னை: மின்னல் வேகத்தில் அந்த இளம் நடிகைக்கு தொடர்ந்து ஜாக்பாட் போல பெரிய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருவதை பார்த்து ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது. ஆரம்பத்தில் இளம் நடிகருடன் நடிக்கத் தொடங்கிய நடிகை தான் வேண்டும் என பல முன்னணி நடிகர்களே தங்கள் படங்களில் அந்த ஹீரோயினை புக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இளம் நடிகை ஒரு நைட்டுக்கு 35 லட்சம் கேட்பதாக சோஷியல் மீடியா முழுக்க நடிகையை காலி செய்யும் வேலை ஹெவியாக நடக்க ஆரம்பித்துள்ளது. எல்லாத்துக்கும் காரணம் சமீபத்தில் நடைபெற்ற ரெய்டு விவகாரம் தான் என்கின்றனர்.

சினிமா துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே எப்போதுமே ஒரு பெரிய கனெக்ஷன் இருந்துக் கொண்டே இருப்பதால் இதுபோன்ற பிரச்னைகளும் எழத்தான் செய்யும் என்பது இயல்பு என்றாலும், இந்த முறை பல முன்னணி நடிகர்கள் பெயர்கள் வசமாக சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வம்பு வலையில் சிக்கிய நடிகர்கள்: பல பெரிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களே புதிதாக படங்களை எல்லாம் எடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென முளைத்த தயாரிப்பாளர் எப்படி இத்தனை படங்களை தயாரிக்கிறார் என்கிற கேள்வி வில்லங்க சோதனைக்கு வழிவகுத்துள்ளது. தயாரிப்பாளர் மட்டுமின்ற் அவரை நம்பி நட்புக்கரம் பாராட்டி அட்வான்ஸ் வாங்கிப் போட்டுக் கொண்ட அத்தனை நடிகர்களையும் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் பஞ்சாயத்துகளும் கிளம்பி உள்ள நிலையில், பலரும் என்ன செய்வதென்றே தெரியாமல் சைலன்ட் மோடில் இருந்து வருவதாக கூறுகின்றனர்.
நடிகையும் சிக்கிட்டாங்க: நடிகர்களை தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் படத்தில் அடுத்தடுத்து அந்த இளம் நடிகையும் ஒப்பந்தம் ஆகி வரும் நிலையில், தான் நடிகை குறித்த மோசமான தகவல்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவத் தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர். இப்போதான் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கிய நிலையில், சந்தோஷத்தில் இருந்துக் கொண்டிருந்த நடிகை கடந்த சில நாட்களாக வெளியே தலை காட்ட முடியாமல் கலங்கிப் போய் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஒரு நைட்டுக்கு 35 லட்சம்: மேலும், நடிகை தினமும் நைட் பார்ட்டியில் அதிகம் தென்படுவதாகவும் ஒரு நைட்டுக்கு பிரைவேட் பார்ட்டிகளில் பங்கேற்க பிரபலங்களிடம் 35 லட்சம் வரை கேட்பதாக நடிகை பற்றிய அவதூறு கருத்துக்களையும் அதிகம் பரப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கு பின்னணியில் இன்னொரு நடிகை இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
பொறாமை தான் காரணம்: பல காலமாக இருக்கும் தன்னை படங்களில் புக் செய்யாமல் நேற்று வந்த இளம் நடிகைக்கு இத்தனை ஹீரோக்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே என நடிகை மீது பாப்புலரான நடிகைக்கு ஏற்பட்ட பொறாமை தான் இப்படியொரு வதந்தியை சோஷியல் மீடியாவில் வைரலாக்க காரணம் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. மேலும், இரண்டு இளம் நடிகைகளுக்குள் இருக்கும் போட்டியும், அரசியல் ரீதியான சர்ச்சைகளும் நடிகையை இந்த விவகாரத்தில் பலியாடாக மாற்ற திட்டமிட்டு இருப்பதாகவும், நடிகை ரொம்பவே இந்த விஷயத்தில் உஷாராக டீல் செய்ய வேண்டும் என்றும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர். ஓவர் நைட்டில் உச்சத்துக்கு செல்வதும் ஆபத்து தான் போல!


Click it and Unblock the Notifications











