தம்மாத்துண்டு துணியுடன் நடித்த நடிகை.. வாலாட்ட நினைத்த வாரிசு நடிகர்.. கடைசியில் என்ன ஆச்சு?
சென்னை: உடம்பில் துணி போட்டுள்ளாரா என்றே தெரியாத அளவுக்கு ஒல்லி நடிகை இயக்குநர் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டுக் கொண்டு மிகுந்த சிரத்தையுடன் படம் நல்லா வந்தால் போதும் என்றும் வெற்றிப் பெற என்ன வேண்டுமானாலும் ஒரு நடிகையாக செய்யலாம் என்று கடுமையாக உழைத்த நடிகையை வாரிசு நடிகர் சீண்டிப் பார்த்தது தான் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட காரணம் என்று பகீர் கிளப்பும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.
பெரிய இடத்து வாரிசு என்பதால், ஏகப்பட்ட பணத்தை தண்ணி போல செலவு செய்து எப்படியாவது அடுத்த பான் இந்தியா ஸ்டாராக மாற வேண்டும் என கனவு கண்ட நடிகருக்கு கடைசியில் படம் வெளியானதும் பெரிய பல்பு தான் கிடைத்தது.

எங்கப்பா நடிகையை எங்கேயுமே காணோமே என ரசிகர்களும், படக்குழுவில் இருந்த சிலரும் கேட்க ஆரம்பித்த நிலையில், தான் வாரிசு நடிகர் வாலாட்டியது தெரிய வந்துள்ளது என்கின்றனர்.
தேவையற்ற விஷயத்தில் கவனம்: பெரிய படத்தை எடுக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமே இந்த படத்தை குடும்பத்துடன் பெரு வாரியான மக்கள் பார்க்கும் படமாக கொடுக்கிறோமா இல்லையா என்பதைத் தான். ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் இடம்பெற்ற கில்மா காட்சிகள் தான் அந்த படத்தை மக்கள் கொண்டாட முடியாமல் போக காரணமே என்றனர். பாகுபலி போன்ற படங்களில் நடிகர்களின் உடைகள் எல்லாம் கண்ணியமாக இருந்த நிலையில், ஒரு சில காதல் காட்சிகளை பெரிதும் ரசிகர்கள் கண்டுக் கொள்ளாமல் படத்தை கொண்டாடினர். ஆனால், தேவையற்ற விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன் என படக்குழு பார்த்த வேலையால் தான் இந்த படம் மையக்கருவை நோக்கி நகராமல் இப்போ மாட்டிக் கொண்டு முழிக்கிறது.
தம்மாத்துண்டு டிரெஸ்: அந்த அழகான நடிகைக்கு ஆடைக்கென பெரிதாக செலவு செய்யாமல், தம்மாத்துண்டு டிரெஸ்ஸை படம் முழுக்க அணிந்து நடிக்க சொல்லி இருக்கின்றனர். தயாரிப்பாளர் மற்றும் நடிகரின் கிரியேட்டிவிட்டியை இயக்குநரும் ஒப்புதல் கொடுத்து இதுதான் காஸ்ட்யூம் என சொல்ல படத்துக்காக படம் நல்லா வர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சொன்னதையெல்லாம் நடிகை கேட்டு நடித்திருக்கிறார்.
நெருக்கமான நடனம்: ஏகப்பட்ட காதல் வலைகளில் விழுந்த அந்த நடன இயக்குநரை வைத்து உருவாக்கப்பட்ட நெருக்கமான நடன காட்சிகளில் எல்லாம் இதெல்லாம் வெறும் நடிப்பு என்கிற ரீதியிலேயே நடிகை நடித்துக் கொடுத்தாராம். ஆனால், வாரிசு நடிகருக்குத்தான் தீ பற்றிக் கொண்டது என்கின்றனர். அதன் விளைவாக அவர் நடிகையிடம் வாலாட்ட நினைத்த நிலையில், ஒட்ட நறுக்கி விட்டாராம் நடிகை.
வாலை ஒட்ட நறுக்கிய நடிகை: நடிகரின் தவறான தொடுதலையும், தவறான அணுகுமுறைகளையும் புரிந்துக் கொண்ட நடிகை ஒரு கட்டத்துக்கு மேல், நடிகரை ஒட்டுமொத்தமாக அவாய்ட் பண்ண ஆரம்பித்த நிலையில், வந்த வினை தான் நடிகையை கடைசியில் ஒட்டுமொத்தமாக அந்த நடிகர் அவாய்ட் பண்ண காரணம் என்கின்றனர். எடுத்துக் கொண்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம் என்றும் வேண்டாத செயல்களில் காட்டிய நாட்டம் தான் பெரிய நஷ்டத்துக்கு காரணம் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











