அய்யய்யோ, நான் அப்படி சொல்லவே இல்லை: கதறும் இளம் நடிகை
சென்னை: நான் இனி இந்தி படங்களில் தான் நடிப்பேன் என்று சொல்லவே இல்லை என்று இளம் நடிகை ஒருவர் அழுகாத குறையாக கூறியுள்ளார்.
செவத்தப் பொண்ணு நடிகை ஒரு பெரிய படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த படம் ரிலீஸானால் தனது மார்க்கெட் கண்டமேனிக்கு எகிறிவிடும் என்று நம்பினார்.

கோலிவுட், டோலிவுட்டின் முன்னணி நடிகையாகிவிடலாம் என்று நினைத்தவரின் கனவு கனவாகவே போய்விட்டது. அவர் பெரிதும் எதிர்பார்த்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை.
அந்த கடுப்பில் நான் இனி இந்தி படங்களில் தான் நடிப்பேன் என்று நடிகை சொன்னாராம். இதையடுத்து தமிழ், தெலுங்கு திரையுலகில் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை.
இதை பார்த்த நடிகையோ அய்யய்யோ நான் அப்படி சொல்லவே இல்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க காத்திருக்கிறேன் என்று கதறியதன் பயனாக புதுப்படம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











