இது தானா சேர்ந்த கூட்டம் பிரியாணிக்காக வந்தது அல்ல: யாரை சொல்கிறார் நடிகை
சென்னை: இது பிரியாணிக்காக சேர்ந்த கூட்டம் அல்ல தானா சேர்ந்த கூட்டம் என்று மூன்றெழுத்து நடிகை தெரிவித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமாகிவிட்டார் அந்த மூன்று எழுத்து நடிகை. இன்றைய தேதிக்கு தமிழகத்தில் அதிகம் ரசிகர்கள் உள்ள நடிகை அவர் தான்.

அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டா போட்டி போடுகிறார்கள். தனக்கு இவ்வளவு ரசிகரகள் கிடைத்துள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை.
இந்நிலையில் ரசிகர் பட்டாளம் குறித்து நடிகை கூறியதாவது,
இது பிரியாணிக்காக சேர்ந்த கூட்டம் அல்ல தானா சேர்ந்த கூட்டம் என்றார். இதை கேட்ட அவரின் ரசிகர்கள் தலைவி பன்ச் டயலாக்டா என்று கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











