ஏதாவது கசமுசா நடந்திருக்குமோ?: இளம் நடிகையின் பேச்சால் எழுந்த சந்தேகம்
Recommended Video

சென்னை: இளம் நடிகை ஒருவர் தானாக வந்து வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது அதிகம் உள்ளது என்று நடிகை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அப்படி படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு யாரும் பட வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

பிரபலம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான இளம் நடிகை ஒருவர் தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று அடிக்கடி கூறி வருகிறார். இதை பார்த்த அந்த லீக்ஸ் நடிகை கடுப்பாகியுள்ளார்.

பேட்டி
என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று இளம் நடிகை மீண்டும் மீண்டும் கூறி வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகம்
லீக்ஸ் நடிகை அடுத்தடுத்து பரபரப்பு புகார்கள் தெரிவித்து வருவதை பார்த்து அனைத்து நடிகைகளும் அமைதியாக உள்ளனர். இந்த இளம் நடிகை மட்டும் ஏன் கீரல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறார். ஏதாவது மேட்டர் இருக்குமோ என்று பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

உண்மை
திரையுலகில் நடக்கும் உண்மையை உலகிற்கு சொல்லும்போது அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்று பொய் சொல்வதா என லீக்ஸ் நடிகையும், தா நடிகையும் இளம் நடிகையை விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











