சாயங்காலம் ஆனாலே ஒரே சரக்குதான்.. மார்க்கெட் காலியானதால் மன வேதனையில் பிரியமான நடிகை?
சென்னை: சினிமாவில் தனது அழகை பார்த்து டாப் ஹீரோக்களே மயங்கி ஜொள்ளு விட ஆரம்பித்துவிட்டனர் என்றும் நாம தான் இனிமேல் டாப் ஹீரோயின் என்கிற தெனாவட்டுடன் ஷூட்டிங் ஸ்பாட்களில் இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்டு ஆட்டம் போட்டு வந்த அந்த பிரியமான நடிகையின் பல்லை பிடுங்குவது போல பட வாய்ப்புகளை பிடுங்கி விட்ட நிலையில், மேடம் இப்போ ஈவ்னிங் ஆனாலே ஃபுல் போதையில் புலம்பி வருவதாக நண்பர்கள் வட்டத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
திடீரென அந்த பிரியமான நடிகை எங்கேப்பா ஒரு படத்தில் கூட தலையை காட்டவில்லையே என கேள்விகளை கிளப்ப ஆரம்பித்து விட்டனர். தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவை தாண்டி சில நடிகைகள் பாலிவுட் மோகத்தால் மும்பைக்கு பறந்துச் சென்று மூக்குடைப்பட்டது போல நடிகையும் மூக்கை உடைத்துக் கொண்டார் என்கின்றனர்.
இனிமேல், நம்ம ஊர் நடிகர்களுடன் நடிகை நடிக்க மாட்டாராம் என்கிற பில்டப் கிளம்பியதும் அவர் ரொம்ப பிசியாக இருக்காரு போல என பல இயக்குநர்களும் சில டாப் ஹீரோக்களும் பக்கத்து ஸ்டேட்டில் புதுசா வந்துள்ள இளம் நடிகைகளை புக் பண்ணுங்கப்பா என நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது: நம்பர் நடிகைகள் எல்லாம் 20 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துக் கொண்டு சர்வைவ் செய்து வரும் நிலையில், 5 ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த பிரியமான நடிகை வந்த வேகத்திலேயே காணாமல் போக காரணமே அவரது ஓவர் பில்டப் தான் என்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் அந்த நடிகை பண்ண அலப்பறை தான் தற்போது அவருக்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் பல மாதங்களாக பாத்ரூமில் கதறிக் கொண்டிருக்க காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர்.
சாயந்திரம் ஆனாலே சரக்கு தான்: ஆரம்பத்தில் குடிப்பழக்கமே இல்லாமல் இருந்து வந்த நடிகை சில நடிகர்களுடன் பிரைவேட் பார்ட்டி பண்ண ஆரம்பித்ததன் விளைவு அவரும் குடிக்கு அடிமையாகி விட்டார் என்கின்றனர். பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்காமல் மற்ற நடிகைகள் கைவசம் அதிகளவில் சென்றுக் கொண்டிருப்பதை அறிந்து என்ன செய்வதென்றே தெரியாமல் நடிகை ரொம்பவே டென்ஷனாகி சாயந்திரம் ஆனாலே ஒரே சரக்கு போதை தான் என்கின்றனர்.
தோழிகள் கவலை: நடிகை பழையபடி சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடிக்க வேண்டும் என நடிகையின் தோழிகளும் குடும்பமும் ரொம்பவே கவலையில் இருப்பதாக கூறுகின்றனர். அந்த நடிகையும் எப்படியாவது தனக்கான படம் வரும் என்கிற நம்பிக்கையுடன் பழக்கப்பட்ட சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார் என்றும் நடிகை ஈவ்னிங் ஃபுல் மப்பில் போன் போட்டு டார்ச்சர் செய்வதாலே சில நெருங்கிய நடிகர்களே அவரது நம்பரையே பிளாக் செய்து வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
கம்முன்னு இருந்தா ஜம்முன்னு இருக்கலாம்: சினிமாவை பொறுத்தவரை நடிகர்களோ, நடிகைகளோ யாராக இருந்தாலும் வேலையை பார்த்துக் கொண்டு வீண் சீன் போடாமல் கம்முன்னு இருந்தால் வாழ்க்கையில் ஜம்முன்னு இருக்கலாம் என்றும் கோடம்பாக்கத்தில் இந்த நடிகையை பற்றிய பேச்சுக்கள் தான் பரவலாக அடிபட்டு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











