இப்படி 2வது படமும் புஸ்ஸாப் போச்சே: கவலையில் வாரிசு நடிகர்
சென்னை: இரண்டாவது படமும் பப்படமாகிவிட்டதே என்று தொப்பி நடிகரின் மகன் கவலையில் உள்ளாராம்.
தொப்பி நடிகரின் மகன் பெரிய இயக்குனரின் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் ஊத்திக் கொண்டது. நடித்த முதல் படமே ஓடவில்லையே என்ற கவலையில் வாரிசு நடிகர் இருந்தார்.
அதன் பிறகு மனதை தேற்றிக் கொண்டு புது படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த இரண்டாவது படம் ரிலீஸாகி அதுவும் பப்படமாகிவிட்டது.
தெலுங்கில் ஹிட்டான படத்தை அப்படியே தமிழில் எடுப்பார்கள் என்று நினைத்தேன் இப்படி சொதப்புவார்கள் என்று நினைக்கவில்லை என்று நடிகர் புலம்புகிறாராம். ஆனால் படம் சம்பந்தப்பட்டவர்களோ, படப்பிடிப்புக்கு நண்பர்கள் பட்டாளத்தோடு வந்து ஆட்டம் போட்டு எங்களுக்கு கூடுதல் செலவு வைத்ததோடு மட்டுமல்லாமல் ஈடுபாட்டோடு அவர் நடிக்கவில்லை என்கிறார்கள்.
இப்படி இரண்டாவது படமும் புஸ்ஸாகிவிட்டதே என்று கன்னத்தில் கையை வைத்து உட்கார்ந்துள்ளாராம் நடிகர்.


Click it and Unblock the Notifications











