Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'செல்லத்திற்கு' வந்த சோதனை!
தென்னிந்தியாவின் முன்னணி கேரக்டர் நடிகர்களில் முக்கியமானவரான பிரகாஷ் ராஜ் மீது தெலுங்குத் திரையுலகில் ஏகப்பட்ட புகார்கள், குமுறல்கள். இவரால் பல பெரிய நடிகர்களின் படங்கள் தாமதமாவதாக புகார்கள் பறந்தன.
படப்பிடிப்புக்கு சரியாக வட மாட்டேன் என்கிறார். வந்தாலும் லேட் ஆக வருகிறார், கால்ஷீட் சொதப்புகிறார் என புகார்கள். சமீபத்தில் இதுதொடர்பாக ஜூனியர் என்டிஆரும், பவன் கல்யாணும், பிரகாஷ் ராஜால் தங்ளது படங்கள் பெரும் தாமதமாவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.
சில மாதங்களுக்கு முன்பும் பிரகாஷ் ராஜ் மீது புகார்கள் குவிந்ததால் அவருக்கு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம். பின்னர் எச்சரிக்கையுடன் தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால் அதன் பின்னரும் கூட பிரகாஷ் ராஜின் சொதப்பல்கள் நின்றபாடில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது மீண்டும் பிரகாஷ் ராஜுக்கு இடைக்காலத் தடை விதித்து தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளதாம்.