twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட்டோடியின் 10வது நவாபாக முடி சூட்டப்பட்ட சைப் அலி கான்

    By Siva
    |

    பாலிவுட் நடிகர் சைப் அலி கான் பட்டோடியின் 10வது நவாபாக முடிசூட்டப்பட்டுள்ளார்.

    ஹரியானா மாநிலத்தில் உள்ளது பட்டோடி கிராமம். அதன் நவாப் வம்சத்தில் வந்தவர் மன்சூர் அலிகான் பட்டோடி. இவர் 9வது பட்டோடி நவாப் ஆவார். மன்சூர் அலி கான் பட்டோடி கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது மகன் சைப் அலி கான் தான், பட்டோடியின் அடுத்த நவாப் என்று முடிவானது.

    இந்நிலையில் நவாப் பட்டம் அளிக்கும் விழா நேற்று பட்டோடியில் உள்ள பாரம்பரிய மாளிகையான இப்ராஹிம் மாளிகையில் நடந்தது. இந்த விழாவில் சைப் அலி கானின் தாயார் ஷர்மிளா தாகூர், சகோதரிகள் சபா மற்றும் சோஹா அலி கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா கலந்து கொண்டார். பின்னர் பாரம்பரிய முறைப்படி, பட்டோடி கிராமத் தலைவர்கள் சைப் அலி கானுக்கு தலைப்பாகை கட்டிவிட்டு நவாப் பட்டம் சூட்டினர்.

    ஏற்கனவே, ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வரும் அவ்காப் இ ஷாஹி வக்பு அமைப்பின் காப்பாளராக சைப் அலி கானின் சகோதரி சபா அலிகான் பட்டோடி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்..

    English summary
    Bollywood actor Saif Ali Khan was appointed as the tenth Nawab of Pataudi at a ceremony that took place today at his ancestral palace in Pataudi, Haryana. Saif Ali Khan was made the Nawab at a 'pagdi' ceremony this morning at the Ibrahim Palace where heads of villages tied a white turban around his head. The ceremony was attended by mother Sharmila Tagore, sisters Saba and Soha.The ceremony took place in the presence of Haryana Chief Minister Bhupinder Singh Hooda.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X