Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
படமே ஆரம்பிக்கலை, முடியை வெட்டச் சொல்றார்!- சிம்புவின் புகார்
சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த சிம்பு, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தது மற்றும் தனது திருமணம் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், "விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் என் கேரக்டரை நான் பெரிதும் விரும்பினேன். இனி இந்த மாதிரி தேர்ந்தெடுத்து நடித்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டேன்.
எனக்கும் த்ரிஷாவுக்கும் காதல் என்பதெல்லாம் சும்மா. நானும் த்ரிஷாவும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். இதில் காதலுக்கு இடமில்லை. என் தங்கை இலக்கியா திருமணத்துக்குப் பிறகு, வீட்டில் பெற்றோர் பார்க்கும் ஒரு சாதாரணப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.
எனது அடுத்தபடம் இன்னும் முடிவாகவில்லை. கோ படத்தில்தான் நடிப்பதாக இருந்தேன். ஆனால் அந்தப் படத்தின் இயக்குநர், நான் கமிட் ஆன அடுத்த நிமிடமே, முடியை வெட்டு.. இதைப் பண்ணாதே, இப்படித் திரும்பாதே என்று ஓவராக என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டார். எனக்கு இதுதான் பிடிக்கவில்லை. என் சுதந்திரம் முக்கியம். அதனால்தான் விலகிக் கொண்டேன்..." என்றார்.