Don't Miss!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Automobiles ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த ரோஷன், விக்ரமை அவரது புதிய வீட்டில் சந்தித்து ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதை ரோஷன் சொன்ன விதம் மற்றும் கதையின் அழுத்தம் போன்றவை விக்ரமுக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.
"இரண்டு மணிநேரம் நான் சொன்ன கதையைக் கேட்டு ஒரு கணம் சிலிர்த்து விட்டார் விக்ரம். கண்டிப்பாக இந்தப் படத்தை நான்தான் பண்ணுவேன். அடுத்த ஆண்டு ஆரம்பிக்கலாம் என உறுதி கூறினார்.." என்று விக்ரமுடனான தனது அனுபவத்தைக் கூறினார் ரோஷன்.
சரி, மலையாளத்தில் நாலு கோடி, அஞ்சு கோடி சம்பளம் தரமாட்டார்களே, விக்ரம் எப்படி ஒப்புக் கொண்டார்?
"இப்படி நீங்கள் நினைப்பதே தவறு என்று சொல்லும் வகையில் ஒரு முடிவை அறிவித்து எனக்கு பெரும் இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டார் விக்ரம். 'இந்தப் படத்துக்கு சம்பளமாக ஒரு பைசா கூட வேண்டாம். மலையாளப் பட உலகுக்கு என பங்களிப்பாக இந்தப் படம் அமையட்டும்' என்று கூறிவிட்டார். அவர் பெருந்தன்மை யாருக்கு வரும்!' என கண் கலங்குகிறார் ரோஷன்.
விக்ரம் இப்போது இரு படங்களில் நடித்து வருகிறார். அவை முடிந்ததும் இந்த மலையாளப் படம் ஆரம்பமாகுமாம். அதற்குள் ரோஷனும் காஸனோவா என்ற தனது படத்தை முடித்துவிடுவாராம்.
சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்!