Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தமிழால் எங்களைக் குளிப்பாட்டும் கருணாநிதி! - கமல்ஹாஸன்
பெண்சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாஸன் பேசியதாவது:
கலைஞரின் விழாக்களில் நான் கலந்துகொண்டு அவரை பாராட்டி பேசுவதை பற்றி, அவருக்கு பிடித்தவர்கள், 'எப்படி அவரிடம் கற்றுக்கொண்டீர்கள்?' என்று கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள், 'அவருக்கு எதற்கு சோப்பு போடுகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள்.
அவரை பற்றி பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். அதை, அரசியல் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரை, ஆசான் என சொல்வதை சோப்பு போடுவதாக நினைக்கக்கூடாது. அவர் தமிழால் எங்களை குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள், அவருக்கு சோப்பு போட வேண்டியதில்லை.
கர்ச்சீப் போட்ட ராம நாராயணன்
கலைஞரின் 100-வது படத்தை இயக்கும் பொறுப்பு வேண்டும் என்று இப்போதே கர்சீப் போட்டுவிட்டார், ராம.நாராயணன்.
99-வது படத்தையாவது எனக்குக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 101-வது படத்துக்கு, இன்னொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எங்கள் ஆசை, அவருக்கு ஆயுள் கூடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கலைஞர் சீராக தன்னையும், நாட்டையும் கவனித்துக் கொ ள்கிறார்...." என்றார் கமல்.