Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
5ம் தேதி ரஜினி இமயமலை பயணம்
வழக்கமாக ஒரு படம் முடிந்தவுடன் ரஜினி இமயமலைக்கு போய் விட்டு வருவார். இந் நிலையில் இப்போது பி.வாசுவின் இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மாதம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் 2வது கட்ட படப்பிடிப்பு நடந்தது.
இப்போது குசேலனின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள குட்டநாடு பகுதியில் நடந்து வருகிறது.
அங்கு நயன்தாரா, மம்தா மோகன்தாஸ் ஆகியோருடன் ரஜினிகாந்த் ஆடும் பாடல் காட்சி உள்ளிட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.
வேம்ப நாடு ஏரி பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி வந்துள்ளதை அறிந்து அங்கு ஏராளமான கூட்டம் கூடியதால் போலீஸ் பாதுகாப்புடன் சூட்டிங் நடக்கிறது.
ஆலப்புழாவில் ஒரு கடலோர தங்கும் விடுதியில் இருந்தவாறு நடித்து வருகிறார் ரஜினி. இந்த படப்பிடிப்பு வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 5ம் தேதி மாலை ரஜினி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கிருந்து அவர் ரிஷிகேஷ் பயணமாகிறார். அங்கு அவர் 15 நாட்கள் தங்கியிருப்பார் என ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.