Don't Miss!
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாய்ஸ் 'கட்'-பிரகாஷ் ராஜ் 'அப்செட்'!
பிரகாஷ் ராஜ் தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் தானே டப்பிங் பேசுபவர். அவருக்கு தென்னிந்திய மொழிகள் அனைத்தும் (மலையாளம் தவிர) நன்கு தெரியும். எனவே அவரே அனைத்துப் படங்களிலு்ம் பேசி விடுவார். மேலும், சொந்தக் குரலில் பேசினால்தான் கேரக்டர் எடுபடும் என்ற கொள்கையிலும் உறுதியாக இருப்பவர் அவர்.
இந்த நிலையில் சிங்கம் படத்தின் தெலுங்குப் பதிப்பான யமுடுவில் பிரகாஷ் ராஜ் கேரக்டருக்கு யாரோ ஒருவரை வைத்து டப்பிங்கை முடித்துள்ளனர். இது பிரகாஷ் ராஜுக்கு பெரும் கோபத்தை கொடுத்து விட்டது. உடனடியாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளருக்கும், தனக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனக்குப் பதில் வேறு ஒருவரை வைத்து டப்பிங் கொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தெலுங்குப் பதில் தன்னையே டப்பிங் பேச வைப்பதாக தயாரிப்பாளர் உறுதியளித்திருந்தார். ஆனால் அதை மீறி நடந்து கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.