Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்
ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள புதிய திரைப்படமான ரா.ஒன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
அதில் பேசிய ஷாருக், யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரை நான் ஆதரிக்க மாட்டேன். ஒருவர் தலைவராகிவிட்டால், உடனே, இது மாதிரியான வேலைகளில் குதி்ப்பது வழக்கமாகிவிட்டது.
ஒருவர் அவரது வேலை எதுவோ அதை மட்டும் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல்வாதிகளின் வேலையைச் செய்ய முயலக் கூடாது. அது போன்ற முயற்சிகளை ஆதரிக்கவும் முடியாது. ராம்தேவின் நடவடிக்கைகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அதே நேரத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழ வேண்டும். இப்போது பொது வாழ்க்கையில் ஊழல் மலிந்துவிட்டது நிச்சயம் பெரும் கவலை தருகிறது என்றார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, சினிமாகாரனான நான் ஏன் அரசியலுக்கு வருவானா என்று கேட்கிறீர்கள். அரசியல்வாதிகளை சினிமாவுக்கு வரச் சொல்ல வேண்டியது தானே. எனக்கு அரசியல் புரிவதும் இல்லை, சரிப்படவும் செய்யாது. நான் ஒரு சுயநலக்காரன். என்னை ரசிகர்களும், நலம் விரும்பிகளும், பொது மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வதை ரசிப்பவன்.
நேர்மையானவர்கள் தான் எனக்கு குருக்கள். கிருஷ்ணர், துரோணாச்சாரியார், ஏன் ராவணன் ஆகியோர் தாங்கள் கொண்ட கொள்கையில் துளியும் நிலை மாறாமல் நின்றனர். அந்த அளவுக்கு மன பலம் அவர்களிடமிருந்தது ஆச்சரியமான விஷயம் என்றார்.
ஷாபானா ஆஸ்மி வரவேற்பு:
அதே நேரத்தில் ஊழலுக்கு எதிரான ராம்தேவின் போராட்டத்தை ஆதரிப்பதாக இந்தி நடிகை ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!