அதிகாலை 4.30 மணிக்கு விசிலடித்து எந்திரன் பார்த்த சிம்பு!
"தலைவர் படத்தைத் தனியா பார்க்கிறதாவது... முதல் நாள் முதல் ஷோ, அதுவும் சக ரசிகர்களுடன் பார்த்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியா இருக்கும்..."
-காசி திரையரங்கில் எந்திரன் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த சிம்புவின் ஸ்டேட்மெண்ட் இது. கடந்த காலங்களில் இவர் ரஜினி பற்றி அடித்த கமெண்ட்டுகளால் கடுப்பிலிருந்த ரசிகர்கள், இவரைப் பார்த்ததும் சற்று கோபத்துடன் கோஷமெழுப்பினர்.
ஆனால் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் வந்த அவர் ரசிகர்களுடன் சேர்ந்து விசிலடித்து ரஜினிக்கு புகழாரம் சூட்ட, ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர்.
அவருடன் பிரேம்ஜி போன்ற நடிகர்களும் வந்திருந்தனர். மீடியாக்கார்கள் சூழந்து கொண்டதும் இப்படிச் சொன்னார் சிம்பு:
"எந்திரன் படத்தை ரசிகர்களுடன் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்கும் அனுபவத்தை மிஸ் பண்ணக் கூடாது என்றுதான் கனடா ஷூட்டிங்குக்குக் கூடப் போகாமல் சென்னையிலேயே இருந்தேன். தலைவர் படம் சம்திங் ஸ்பெஷல் எப்பவுமே" என்றார்.
தியேட்டருக்குள் படம் பார்க்க நுழைந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்ததும் விசிலடித்து கைதட்ட, உடனிருந்தவர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
"இது சூப்பர்ப் படம். சான்ஸே இல்ல... தலைவர் ராக்ஸ். 'சிட்டி' ரஜினியின் வில்லத்தனத்தை வெகுவாக ரசித்தேன்" என்றார் படம் முடிந்து வெளியில் வந்த சிம்பு.


Click it and Unblock the Notifications











