எனக்கொரு படம் பண்ணுங்களேன்: ராகவா லாரன்சிடம் அஜீத் வேண்டுகோள்
அஜீத் குமார் காஞ்சனா படத்தைப் பார்த்து விட்டு அதை இயக்கி, நடித்த ராகவா லாரன்ஸை தன் வீட்டிற்கு அழைத்து மனதாரப் பாராட்டியுள்ளார்.
அஜீத் குமாரின் 50-வது படம் மங்காத்தா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் மங்காத்தா படப்பிடிப்பில் பிசியாக இருந்த அஜீத் தற்போது தான் சற்று ரீலாக்சாக உள்ளார். அதனால் பிற நடிகர்களின் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படத்தைப் பார்த்த அஜீத் உடனே போனை எடு்தது லாரன்ஸை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். தல கூப்பிட்டவுடன் அவரும் காரை எடுத்துக் கொண்டு அஜீத் வீட்டுக்கு வந்தார். அஜீத் அழைத்திருக்கிறாரே, என்ன விஷயமாக இருக்கும் என்று லாரன்ஸுக்கு ஒரே குழப்பம்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அஜீத் லாரன்ஸை தட்டிக் கொடு்தது காஞ்சனா படத்தை இப்பதான் பார்த்தேனப்பா, படம் சூப்பரா இருக்கு. எனக்கொரு படம் பண்ணிக் கொடுங்களேன் என்று கேட்க லாரன்ஸுக்கோ ஒரே குஷியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











