Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரூ.60 லட்சம் சம்பள பாக்கி: தயாரிப்பாளர் மீது நடிகர் மாதவன் புகார்!
இந்தப் புகார்கள் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம்.
பிரபல இந்திப் பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவின் இந்திப் படம் 'டார்லிங்'-கை, தமிழில் மாதவனை வைத்து 'அவன் அவள் அது' என்ற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் கோனா வெங்கட். ராம்கோபால் வர்மாவின் உதவியாளர்தான் இவர்.
சதா, ஷமிதா ஷெட்டி நடித்த இந்த படம் முடியும் தறுவாயில் மாதவனு்ககும், தயாரிப்பாளருக்கும் சம்பள விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, எடுத்த வரைக்கும் போதும் என்று படத்தை வெளியிடும் வேலையில் இறங்கிவிட்டார்.
படத்தின் ஆடியோவையும் மாதவன் இல்லாமலேயே வெளியிட்டார்.
இதற்கிடையே, மாதவனால் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக, முன் கூட்டியே, தயாரிப்பாளர் சங்கத்தில் மாதவன் மீது புகார் செய்தார். மாதவனுக்கு பேசப்பட்ட சம்பளம் அதிகம் என்றும், அதை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் படத்தின் டப்பிங் பேச மறுத்துவிட்ட மாதவன், இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தனக்கு பேசப்பட்ட ரூ.75 லட்சம் சம்பளத்தில் ரூ.15 லட்சம் மட்டுமே தரப்பட்டுள்ளதாகவும், பாக்கி ரூ.60 லட்சத்தை கவுரவ் சர்மா கொடுக்க வேண்டும் என்றும் மாதவன் தனது புகாரில் கூறியுள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக மாதவன் மற்றும் கவுரவ் சர்மா இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது தயாரிப்பாளர் சங்கம். நேற்று நடத்தப்பட்ட பேச்சில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இன்றும் பஞ்சாயத்து தொடர்கிறது!