அமிதாப்பச்சன் நிகழ்ச்சிக்கு மாயாவதி அரசு அனுமதி மறுப்பு

அமிதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆரக்ஷான்' இந்திப் படம் வெளியாக இருப்பதையொட்டி, அவரும் இயக்குநர் பிரகாஷ் ஜா, நடிகர் சைப் அலிகான், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் லக்னோ நகரில் இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உத்தரபிரதேச மாநில அரசு நேற்று மறுத்து விட்டது.
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பின்னர் அமிதாப்பச்சன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க இருந்தார். அந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
Comments


Click it and Unblock the Notifications