Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சிங்கம் போய் வில்!
பிரபுதேவாவும், விஜய்யும் இணைந்து கொடுத்த போக்கிரி சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அதன் பின்னர் வெளியான விஜய்யின் படங்கள் பெரிய அளவில் ரிசல்ட் காட்டவில்லை.
இந்த நிலையில் பிரபு தேவாவுடன் மீண்டும் இணைகிறார் விஜய். இப்படத்திற்கு முதலில் சிங்கம் என பெயரிட்டிருந்தார் பிரபுதேவா. ஆனால் இதே டைட்டிலை இயக்குநர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார்.
இதையடுத்து டைட்டிலை மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இப்போது வில் என பெயரிட்டுள்ளனராம். இந்த டைட்டில் விஜய்க்கும், பிரபு தேவாவுக்கும் பிடித்துப் போய் விட்டதாம்.
ஆனால் இங்கும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதே பெயரில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. உடல் ஊனமுற்ற, புத்திசாலியான இளைஞர் வேடத்தில் சூர்யா நடிக்கிறார்.
தற்போது பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் படத்துக்கு வில் என பெயரிடப்பட்டுள்ளது குறித்து எஸ்.ஜே.சூர்யா தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்ைல.
வில் படத்தை அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. பழனி அருகே ஜூன் 7ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயனதாரா மற்றும் பிரகாஷ் ராஜ், பிஜூ மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
குருவி படத்தில் இடம் பெறாமல் போன வடிவேலு, வில் படத்தில் பெரும் தொகைக்கு புக் ஆகியுள்ளாராம். வடிவேலுவை கண்டிப்பாக படத்தில் சேர்க்க வேண்டும் என்று விஜய்யே, பிரபுதேவாவிடம் கூறி விட்டாராம். தொடர்ந்து இரு படங்கள் சறுக்கி விட்டதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய். அந்த இரு படங்களிலும் வடிவேலு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிவர்மன் கேமராவைக் கையாளுகிறார். சுனில் கலையைப் பார்க்கிறார். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கிறார்.