Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜல்லிக்கட்டு: தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரித்தீஷ் அப்பீல்!
'தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம்' என்ற அமைப்பின் தலைவராக உள்ளார், கானல் நீர், நாயகன் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜே.கே.ரித்தீஷ்குமார்.
இவர் சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார்:
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு 1,200 கிராமங்களில் நடைபெறுகின்றன. 67 ஆயிரம் பேர் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள்.
இந்த வருடம் இதுவரை, 200 ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளுக்கு ஒரு சான்று. எனவே அதை நடத்தியே தீருவோம். இந்த விளையாட்டை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்துள்ளேன், என்றார் ரித்தீஷ்.
பின்னர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் 10 பேருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை நடிகர் ரித்தீஷ் நிதி உதவி அளித்தார்.