Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மகளிடம் உபதேசம் கேட்டது போலிருந்தது - ஸ்ருதி இசையில் கமல்
இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கி, நஸ்ருதீன் ஷா, அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்து வெற்றி பெற்ற 'எ வெட்னஸ்டே' படத்தை கமல்ஹாசன் தமிழில் 'உன்னைப்போல் ஒருவன்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஈநாடு' என்ற பெயரிலும் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கமலஹாசன், மோகன்லால் இணைந்து நடிக்க சக்ரி டொலட்டி இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் தனது தந்தை கமல்ஹாசனை இரண்டு பாடல்கள் பாட வைத்துள்ளார் ஸ்ருதி.
மகள் இசையில் பாடிய அனுபவம் குறித்து இப்படிக் கூறுகிறார் கமல்:
உன்னைப்போல் ஒருவன் படத்தில் பாடல்கள் இல்லை என்பது தவறு. அந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. 4 பாடல்கள் பின்னணி காட்சியாக வரும். ஒரு பாடல் டிஸ்கோ மிக்ஸ் ஆக வரும். பாடல்கள் எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்துள்ளன. மனுஷ்யபுத்திரன் முதல்முறையாக ஒரு பாடலையும், ஒரு பாடலை நானும் (கமலஹாசன்) எழுதியுள்ளோம்.
மடோனா, ஜேம்ஸ்பாண்ட் ஆகியோர் பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெறும். இசைக்கு இந்த படத்தில் தனித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி ஹாசன் இசை அமைத்துள்ளார். என் மகள் என்பதற்காக அவரை நான் பாராட்டவில்லை. ஸ்ருதி ஹாசன் என்பது அவளுக்கு ஒரு விலாசம்தான். தகுதியின் அடிப்படையில் தான் அவர் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு சரியான நியாயம் வழங்கியிருக்கிறார்.
தன்னம்பிக்கையுடன் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். நானும் பாடியிருக்கிறேன். நான் பாடியபோது குற்றம், குறைகளை, ஏற்றம் இறக்கங்கள் ஆகியவற்றை எனக்கு சொல்லிக் கொடுத்து ஒரு தேர்ந்த இசைஅமைப்பாளர் போலத்தான் நடந்துகொண்டார். கிட்டத்தட்ட தந்தைக்கு மகள் உபதேசம் செய்தது போல இருந்தது... என்றார்.