Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரபுதேவா, பிரமாதம்யா!
கடந்த 28ம் தேதி விஜய் டிவியின் உலக நாயகன் கமல்ஹாசன் பொன் விழாக் கொண்டாட்டம் நடந்தபோதுதான் இந்த அதிசயமும் நடந்துள்ளது.
அன்றைய தினம் நயனதாராவுடன் விழா மேடைக்கு பிரபு தேவா வருவார் என எதிர்பார்ப்பு நிலவியது. நயனதாராவும், பிரபுதேவாவுடன் நிகழ்ச்சிக்கு வரப் போவதாக சில பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவித்திருந்ததால் மீடியாக்காரர்கள் குவிந்திருந்தனர்.
ஆனால் இருவருமே வரவில்லை. ஆனால் இரவு 9 மணிக்கு மேல்தான், அதாவது கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடிவடையப் போகும் நேரத்தில்தான் பிரபுதேவா வந்தார். அவர் மட்டும் தனியாக வந்தார். மீடியாக்காரர்களை சந்திக்காமல் டபாய்த்து விட்டு உள்ளே போய் விட்டார்.
அதற்கு முதல் நாள் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த பிரபுதேவா நேராக அண்ணா நகரில் உள்ள தனது வீட்டுக்குப் போய் விட்டார். அன்றைய இரவை அங்கேயே கழித்தாராம். கணவரின் வருகைக்காக காத்திருந்த ரமலத்தும் கண்ணீர் மல்க சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மீண்டும் கணவர் வீடு திரும்பியதால் ரமலத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராம். மேலும் தனக்குப் போன் செய்த சில பத்திரிக்கையாளர்களிடம் இப்போதைக்கு இதுகுறித்துப் பேச எதுவும் இல்லை என்றும் கூறி விட்டாராம்.
மாற்றம், நிரந்தரமாகட்டும்.