twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழர்களின் வயிறுகளை எரிய வைக்கிறது இந்திய அரசு - ராஜேந்தர் ஆவேசம்

    By Chakra
    |

    T Rajendhar
    சென்னை: லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து வரவேற்பதன் மூலம் தமிழர்களின் வயிறுகளை எரிய வைக்கிறது இந்திய அரசு என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுமைக்குச் சொந்தக்காரர் உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டிய கொடுங்கோலர் ராஜபக்சே தமிழினத்தையும், மனித நேயத்தையும் ஒன்று சேர்த்து மண்ணைத் தோண்டிப் புதைத்த மாபாதகர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அரசுக்குக் கேட்கவில்லை கூவிக்கூவி அழும் இலங்கைத் தமிழர்களின் அழுகை. அதனால் தானோ ராஜபக்சே டெல்லிக்கு புரியப் போகிறார் வருகை.

    மத்திய அரசு ராஜபக்சேவுக்கு விரிக்க நினைக்கிறது ரத்தினக் கம்பளம்.

    இந்தச் செயல் 6 1/2 கோடி தமிழர்களையும் அவமானப்படுத்தும் அவலம்.

    மத்திய அரசின் இந்த அணுகுமுறை தமிழர்களின் உள்ளத்தையும் உணர்வையும் நோகடிக்கின்றது. ஒப்புக்காகக் கூட ராஜபக்சேவை மத்திய அரசு வரவேற்கக் கூடாதென தமிழக அரசு சார்பில் வைக்கப்படவில்லை கோரிக்கை. தமிழர்களின் உணர்வு ஆகலாமா வற்றிப்போகும் வைகை.

    தமிழர்களின் வயிற்றை எரிய வைக்கிறது இந்திய அரசின் செய்கை. இப்படிப்பட்ட இந்தச் செயலை லட்சிய தி.மு.க.வின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்டனமும் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X