Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினியின் மனிதாபிமானம்!
தனது குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படம் தொடர்பான விழாக்கள் அனைத்திலும் சித்ரா இருக்க வேண்டும் என விரும்புவார். அவருக்காக உதவிகள் செய்வதிலும் முன்னணியில் நிற்பார்.
பிரபலமான புகைப்படக்காரராக இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக சித்ராவால், மாறிவரும் விஞ்ஞான வளர்ச்சியோடு போட்டி போட்டு புதுப்புது கேமிராக்களை வாங்க முடியவில்லை.
இதனைக் கேள்விப்பட்ட ரஜினி, சித்ராவுக்கே தெரியாமல் ஒரு காரியம் செய்தார். தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் நிக்கான் தயாரிப்பான டி-80 ரக நவீன கேமிரா ஒன்றை வாங்கி வரச் செய்தார்.
மற்றவற்றை சித்ரா வாயாலேயே கேட்போம்:
"நேற்று பிற்பகல் திடீர்னு ரஜினி சார் கூப்பிடறார்னு போன் வந்துச்சு. நான் உடனே வேகமா மண்டபத்துக்குப் போனேன். ரஜினி சார் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார். என்ன சித்ரா... எப்படி இருக்கு வேலைன்னு கேட்டவர், சடார்னு என் கைல டி-80 கேமிராவைக் கொடுத்தார். நான் ஆடிப் போயிட்டேன். அவர்கிட்ட நான் இதைக் கேட்கவே இல்லை.
மற்றவர்கள் கேட்காமலேயே உதவி செய்வதில் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் அவரே" என்கிறார் சித்ரா.