Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினியின் மனிதாபிமானம்!
தனது குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படம் தொடர்பான விழாக்கள் அனைத்திலும் சித்ரா இருக்க வேண்டும் என விரும்புவார். அவருக்காக உதவிகள் செய்வதிலும் முன்னணியில் நிற்பார்.
பிரபலமான புகைப்படக்காரராக இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக சித்ராவால், மாறிவரும் விஞ்ஞான வளர்ச்சியோடு போட்டி போட்டு புதுப்புது கேமிராக்களை வாங்க முடியவில்லை.
இதனைக் கேள்விப்பட்ட ரஜினி, சித்ராவுக்கே தெரியாமல் ஒரு காரியம் செய்தார். தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் நிக்கான் தயாரிப்பான டி-80 ரக நவீன கேமிரா ஒன்றை வாங்கி வரச் செய்தார்.
மற்றவற்றை சித்ரா வாயாலேயே கேட்போம்:
"நேற்று பிற்பகல் திடீர்னு ரஜினி சார் கூப்பிடறார்னு போன் வந்துச்சு. நான் உடனே வேகமா மண்டபத்துக்குப் போனேன். ரஜினி சார் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார். என்ன சித்ரா... எப்படி இருக்கு வேலைன்னு கேட்டவர், சடார்னு என் கைல டி-80 கேமிராவைக் கொடுத்தார். நான் ஆடிப் போயிட்டேன். அவர்கிட்ட நான் இதைக் கேட்கவே இல்லை.
மற்றவர்கள் கேட்காமலேயே உதவி செய்வதில் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் அவரே" என்கிறார் சித்ரா.