Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'ஆன்ட்டிகளை மடக்க..': ரஜினி - கமலை சிறுமைப்படுத்திய எஸ்.பி.பி மகன்!
ஆன்ட்டிகளை எப்படி மடக்கலாம் என்று கேள்வி எழுப்பி, அந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல் பெயர்களை இழுத்து சிறுமைப்படுத்தியுள்ளாராம் பிரபல தயாரிப்பாளரான எஸ்பிபி சரண்.
இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆரண்ய காண்டம். மூன்றாம் தர மலையாளப் பட ரேஞ்சுக்கு இதில் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளனவாம்.
இந்த படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
52 காட்சிகளை வெட்டி நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர் தணிக்கை குழுவினர். குறிப்பாக ரஜினி, கமலை விமர்சிக்கும் வசனங்கள் அதிகமிருந்ததால், அனைத்தையும் நீக்கினார்களாம்.
இதுபற்றி தணிக்கை அதிகாரி பழனிச்சாமி கூறும்போது, "ஆரண்ய காண்டம் படத்தில் ரஜினி, கமலை சிறுமைப்படுத்தும் காட்சிகள் உள்ளன.
'ஆன்ட்டிகளை மடக்குவது எப்படி?' என்று இளைஞர்கள் பேசுவது போன்று ஒரு காட்சி.
இதற்கு ஒருவன் இப்படி ஐடியா கொடுக்கிறான்: 'கமல் பிடிக்குமா? ரஜினி பிடிக்குமா? என்று ஆன்ட்டிகளிடம் கேள். கமல் பிடிக்கும் என்றால் கிஸ் கொடுத்து ஈஸியா மடக்கிவிடலாம். ரஜினி பிடிக்கும் என்றால் அந்த பெண்மணி வேறுமாதிரி மடக்க வேண்டும்' என்று விளக்கம் சொல்வது போன்று வசனங்கள் இருந்தன. அவற்றை நீக்கி விட்டோம்," என்றார்.
இதில் ஜாக்கி ஷெராப் ராயபுரம் தாதாவாக நடித்துள்ளார். அவரது நிர்வாண காட்சிகள், ஆபாசமான மசாஜ் சீன்கள் போன்றவைகளும் படத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.
இவைகளையும் தணிக்கை குழு நீக்கியுள்ளது. தணிக்கை குழு நடவடிக்கைக்கு எஸ்.பி.பி. சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தை டிரிபியூனலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஒருவேளை விளம்பர உத்தியின் ஒரு பகுதியாக இந்த வேலையைச் செய்திருப்பாரோ எஸ்.பி.பி. சரண்.