ஜீவனாம்சம்-சிரஞ்சீவி தம்பி மீது மனைவி வழக்கு

நடிகர் பவன் கல்யாண் தன்னை கைவிட்டுவிட்டு ரேணு தேசாய் என்ற சக நடிகையை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஹைதராபாத் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நந்தினி வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பவன் கல்யாணுக்கும் ரேணு தேசாய்க்கும் திருமணம் நடந்ததாக நந்தினி கூறிய குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை நந்தினி இப்போது தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், பவனால் கைவிடப்பட்ட தனக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட நந்தினி கோரியுள்ளார்.


Click it and Unblock the Notifications











