விஜய்யின் 50 வது படம்-இயக்குனர் யார்?

தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தை தயாரிப்பது சந்திரசேகர் அல்ல, விஜய்க்கு திருப்புமுனை தந்த காதலுக்கு மரியாதை படம் தயாரித்த சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ். இளையராஜாவை இசையமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
படத்தை இயக்கப் போவது யார் என்பதை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இப்போதைக்கு ஜெயம் ராஜா, கேஎஸ் ரவிக்குமார், பேரரசு, சித்திக் மற்றும் செல்வா ஆகியோரில் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்கப் போவதாகக் கூறி வந்தார்கள்.
இந்த ஐவரில் ஜெயம் ராஜாவுக்குதான் இந்த வாய்ப்பு என்று உறுதியாக கூறப்படுகிறது. ஜெயம் ராஜாவைப் பொறுத்தவரை இது பெரிய வாய்ப்பல்ல. சுமை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அவர் தொடர்ந்து 4 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவருக்கு திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள் குவிந்தாலும், எதையும் ஏற்காமல் தனது சொந்த நிறுவனத்துக்காகவே படம் செய்ய கதையைத் தயார் செய்து வைத்திருந்தார். தன் தம்பி ரவி, பேராண்மையை முடித்து வந்ததும், புதிய படம் துவங்குவதாகத் திட்டம்.
அதற்குள் விஜய் மற்றும் அவர் தந்தை ஆகியோர் அன்புத் தொல்லை செய்யவே, தட்ட முடியாமல் இந்தப் படத்துக்கு ஒப்புக் கொண்டாராம். ஆனால் அவர் போட்ட ஒரே நிபந்தனை, படத்தின் இறுதிக் காட்சி முடிந்து பூசணிக்காய் உடைக்கும் வரை, வேறு யாரும் தலையிடக் கூடாது என்பதுதான்!.


Click it and Unblock the Notifications











