Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிங்கம் புலி திருட்டு டிவிடி... போலீஸில் ஜீவா புகார்!
சென்னை: சிங்கம் புலி படத்தின் திருட்டு டிவிடிக்கள் பர்மா பஜாரில் கூவிக் கூவி விற்கப்படுவதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகர் ஜீவா.
ஜீவா நடித்த சிங்கம்புலி என்ற படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் ஜீவா, சாய் ரமணி ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில், "சமீபத்தில் ரிலீசான சிங்கம்புலி படத்தின் திருட்டு சி.டி.க்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
போலீஸ் கமிஷனரை சந்தித்த பின் நடிகர் ஜீவா நிருபர்களிடம் கூறுகையில், "சுமார் 1 1/2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு இப் படத்தை எடுத்தோம். ஆனால் படம் வெளியான 2 நாளிலேயே திருட்டு சி.டி.க்கள் விற்பனைக்கு வந்து விட்டன. இவற்றை பள்ளிகள் மற்றும் கோவில்களின் அருகே கூவி கூவி விற்கின்றனர். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் திருட்டு டி.வி.டி.க்களை பார்க்க முடியாது. அதுபோன்ற நிலையை இங்கும் ஏற்படுத்த வேண்டும். அது போலீஸ் மற்றும் அரசின் கையில்தான் உள்ளது," என்றார்.