Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வெடிக்காத விக்ரம் வெடி!
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த 'வெடி' கைவிடப்பட்டது.
மோகன் நடராஜன் தயாரிக்க உருவாகவிருந்த இந்தப் படத்தின் கதை குறித்து விக்ரமுக்கும் பூபதி பாண்டியனுக்கும் ஆரம்பத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது.
இதுகுறித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வர விக்ரமும் பூபதி பாண்டியனும் ஊட்டியில் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் இருவரும் தங்கள் நிலையில் பிடிவாத இருக்க, பூபதி பாண்டியன் இயக்கத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டாராம் விக்ரம்.
ஆனால் வேறு இயக்குநர் இயக்குவதாக இருந்தால் நாம் படத்தைத் தொடரலாம் என்று கூறினாராம்.
இதனால் வெடி படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார் மோகன் நடராஜன்.
இந்த நேரத்தில், மதராஸபட்டினம் படத்தை இயக்கிய விஜய் கூறிய ஒரு ஸ்கிரிப்ட் விக்ரமை வெகுவாகக் கவர்ந்துவிட, அதையே அடுத்த படமாகப் பண்ணலாம் என்று மோகன் நடராஜனுக்கு சிபாரிசு செய்ய, அவரும் விஜய்க்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்.
முழு ஸ்கிரிப்டையும் பக்காவாக தயார் செய்துவிட்ட விஜய், இம்மாத இறுதியில் ஷூட்டிங்கை துவங்கும் முடிவில் இருக்கிறார்.
இந்தப் பக்கம் பூபதி பாண்டியனும் சும்மா இல்லை. அவர், விஷாலை வைத்து ஜிகே பிலிம் கார்ப்பரேஷனுக்காக புதிய படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாகிவிட்டார். அவன் இவன் படத்தில் விஷாலின் வேலை முடிந்ததும் இந்தப் புதுப்படத்தை துவங்குகிறார்கள். பெயர் பட்டத்து யானை!