Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிரின்ஸ் ரிலீஸ... திருச்சி, மதுரையில் விவேக் ஓபராய் டூர் – ரஜினி, கமலுக்கு புகழாரம்!
பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடித்த 'பிரின்ஸ' என்ற இந்திப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் சென்னைக்கு வந்து நிருபர்களைச் சந்தித்துப் பேசினார்.
தற்போது தமிழகத்தின் இதர முக்கிய நகரங்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் விவேக். நேற்று திருச்சி வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
திருச்சி எனக்கு புதிது. எப்போதும் பிடித்தது சென்னை. காரணம் என் தாய் நகரம் சென்னைதான்.
அதனால் தமிழ்நாடு மீது பெரும் மதிப்பு எப்போதும் உண்டு. சுனாமியின் போது கிராமங்களை தத்தடுத்து மீட்பு பணி செய்தேன். அப்போது 'நடிகர் அண்ணா'ன்னு பாசத்துடன் மக்கள் அழைத்ததை மறக்க முடியாது.
தமிழ் சினிமா மார்க்கெட் பெரியது. இதனால் தான் எனது பிரின்ஸ் படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறேன்.இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டது.
இந்திய சினிமாவில் ஞாபகமறதி கதாபாத்திரம் கொண்ட படங்கள் 84 வெளி வந்து உள்ளது. இதுவும் கதாநாயகனின் மறதி பற்றிய கதைதான் மெகா திருடனாக நடிக்கிறேன். என் நினைவுகளை திருட வில்லன், போலீஸ் என்னை துரத்தும் 6 நாள்களுக்குள் அவர்கள் என்னை பிடிக்கனும் இதை சுவராசியமாக எடுத்து உள்ளோம்.
ரஜினி, கமல் நடித்த தமிழ்ப் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களையே குருவாக ஏற்று நடிக்க ஆரம்பித்தேன்... இன்று நானும் ஒரு நடிகனாகிவிட்டேன். எனது படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்...", என்றார்.