Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆந்திர வெள்ளம்-தமிழ் நடிகர்கள் ரூ.20 லட்சம் உதவி!
ஆந்திர மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில், ஆந்திர மாநில திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில், ஹைதராபாத்தில் நட்சத்திர கலைநிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, செயற்குழு உறுப்பினர் சூர்யா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
ரஜினிகாந்த் கட்டாயம் இந்த விழாவில் பங்கேற்கிறார் என்று ஹைலைட் செய்து டிக்கெட்டுகளை விற்றிருந்தனர் தெலுங்கு திரையுலகினர். அதிகபட்சமாக ஒரு டிக்கெட் விலை ரூ.1 லட்சம் வரை விற்கப்பட்டது.
ஆந்திர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம், சூர்யா ரூ.10 லட்சம், விஷால் ரூ.2.50 லட்சம், விஜய் ரூ.2 லட்சம், ஜெயம் ரவி ரூ.1 லட்சமும் தங்கள் பங்களிப்பாகத் தந்தனர்.
அனைத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை விழாக்குழு தலைவர் நடிகர் பாலகிருஷ்ணாவிடம், ராதாரவி வழங்கினார்.