Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
பாலா படத்தில் 'ஜித்தன்'?
ஜீவா நடிக்க வந்து வெகு காலத்திற்குப் பின்னர் நடிகரானவர் ரமேஷ். இருந்தாலும் இதுவரை அவருக்கு பெரும் பிரேக் கிடைக்கவில்லை.
ஜித்தன், மதுரை வீரன், நீ வேனுண்டா செல்லம் என சில படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில், பிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற புதிய படத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடிக்க வந்துள்ளார் ரமேஷ்.
இதற்கிடையே, இயக்குநர் பாலா, ரமேஷை அழைத்துப் பேசியுள்ளாராம். தனது அடுத்த படத்தில் ரமேஷை நடிக்க வைக்க பாலா யோசித்து வருவதாக தெரிகிறது. இதனால் ரமேஷ் பெரும் உற்சாகம் அடைந்துள்ளார்.
பாலா படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் உச்சத்திற்குப் போயுள்ளனர் என்பது வரலாறு. எனவே தனக்கும் நிச்சயம் மிகப் பெரிய பிரேக் கிடைக்கும் என்று நம்புகிறார் ரமேஷ்.
பாலாவின் சிஷ்யரான அமீர் இயக்கிய ராம் படத்திற்குப் பிறகுதான் ஜீவா பெரும் உச்சத்திற்குப் போனார் என்பதால் பாலாவின் நடிப்பு அழைப்புக்காக காத்திருக்கிறாராம் ரமேஷ்.
அவருக்கு இன்னொரு ஆசையும் உண்டாம். அது தனது தம்பி ஜீவாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது. கூடிய விரைவில் அதுவும் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ரமேஷ்.
'சித்தனை' உயர்த்திய பாலா, 'ஜித்தனை'யும் உயர்த்தாமல் போய் விடுவாரா என்ன?